புதன், 26 டிசம்பர், 2012

இளைய சமுதாயம் எதை நோக்கி செல்கிறது ..?

அஸ்ஸலாமு அலைக்கும்..

அல்லாஹ் நமக்கு நேர் வழிகாட்டியாக நபி{ஸல்} அவர்களை படைத்துள்ளான்.

அல்லாஹ் குர்ஆனில் இவ்வாறாக கூருக்கிறான்.

     لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا 33:21.
 அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.

ஒரு முஸ்லிம் அவன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை இப்படி தான் வாழ வேண்டும் என்று நபி{ஸல்}சொன்னது மட்டும் இல்லாமல் வாழ்ந்து காண்பித்தார்கள்.ஆனால் இப்படி வாழாமல் நம் மன போன போக்கிலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அல்லாஹ் நம்மை பாதுக்காக வேண்டும்.

இன்றைக்கு நம் சமுதாய ஆண்,பெண்கள் சினிமாவில் வளம் வரும் நடிகர்,நடிகைகளை பின் பற்றுகின்றார்கள், அவர்களை போன்று உடை அணிவதும்,முடி வெட்டுவதும் நம்மவர்களின் பழக்கமாக ஆக்கி கொண்டனர்.

  يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ 2:21. மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம். எனவே நாம் தவாறான வழியிலிருந்து நேரான வழிக்கு வரவேண்டும்.